திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
நாகசைதன்யா, சமந்தா ஆகியோர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 4 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேருமே தங்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பதை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனா தற்போது ஒரு பேட்டியில் அதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நாகசைதன்யா, சமந்தா விஷயத்தில் எல்லா தந்தைகளின் போலவே நானும் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் எனது மகனோ எங்களை நினைத்து கவலைப்பட்டார். அவர்களின் இந்த உறுதியான முடிவுக்கு பிறகு எனது மகனுக்கு நாங்கள் ஆதரவாக இருந்தோம். அதோடு இந்த விவாகரத்து முழுக்க முழுக்க சமந்தாவினால் எடுக்கப்பட்டதுதான். அவர்தான் விவாகரத்துக்கு ரொம்ப ஆசைப்பட்டார் என்று தெரிவித்திருக்கிறார் நாகார்ஜுனா.