ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது வலிமை படத்தை இயக்கி வரும் எச்.வினோத் இயக்கிய படம் சதுரங்க வேட்டை. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தயாரானது. அரவிந்த் சாமி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், , ராதா ரவி, நாசர், சாந்தினி, ஸ்ரீமன், மனோபாலா, குமரவேல், இ.ராமதாஸ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். எச். வினோத்தின் கதையை சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கி இருந்தார். காமெடி நடிகர் மனோபாலா தயாரித்திருந்தார்.
இந்த படம் பல பிரச்சினைகள் காரணமாக முடங்கி கிடந்தது. தற்போது இதனை ஆன்ஸ்கை டெக்னாலஜி என்ற நிறுவனத்தின் சார்பில் முத்து சம்பந்தம் வாங்கி வெளியிடுகிறார். இவர் தற்போது 2030 என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
படத்தை வெளியிடுவது தொடர்பாக அவர் கூறியதாவது: சதுரங்க வேட்டை இந்திய திரைத்துறையில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்று. இதன் இரண்டாம் பாகம் சதுரங்க வேட்டை 2 வெளிவருவதைப் பற்றி கேள்விப்பட்டபோது, மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் காட்சிகளை கண்டபிறகு, என்னுள் மிகப்பெரும் ஆர்வம் குடிகொண்டது.
எதிர்பாராத சூழ்நிலைகளால் படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து, நான் பெரிதும் ஏமாற்றமடைந்தேன். தற்போது சதுரங்க வேட்டை 2 படத்தை எங்கள் நிறுவனம் மூலம் வெளியிட முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். படத்தை வெளியிட ஏதுவாக பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் ஜனவரி 2022ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.