'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் மாநாடு. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பட வெளியீட்டின் போது சில பிரச்னைகளும் நடந்தது. ஆனபோதிலும் அதையடுத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வை எட்டியுள்ளது. மாநாடு படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை படக்குழு கொண்டாடி வருகின்றனர். ரஜினி, சிவகார்த்திகேயன் என பல திரைநட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநாடு படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதில் மாநாடு படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்து வரும் ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி . மாநாடு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இது குற்றச்செயல், அனைவரும் இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்க்கட்டும் என தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.




