பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க மறுத்து, பின் சிவாஜி நடித்து வெளிவந்த “ராணி லலிதாங்கி” | கருப்பு படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகியது ஏன்? : சொல்கிறார் சாய் அபயங்கர் | மும்பைக்கு குடியேறுகிறாரா அல்லு அர்ஜுன்? | பாண்டிராஜ் உடன் மீண்டும் இணையும் கார்த்தி | ரத்னகுமாரின் ‛29' படம் மே 8ம் தேதி ரிலீஸ் | நடிகர் சத்யராஜ் குடும்பத்தினர் நடத்தும் அரசியல் நாடகம்: அப்பா, மகள் திமுக., மகன் தவெக., | 'கேஜிஎப் 3' பற்றி அப்டேட் கொடுத்த யஷ் | வேலுாரில் நடந்த உண்மை சம்பவம்: 'கர' குறித்து இயக்குனர் பேட்டி | தேர்தலுக்கு மறுநாள் ரிலீஸ்: அதிகரிக்கும் படப்பட்டியல் | 2026 தமிழக தேர்தல் களம் : இருமுனை போட்டியா... நான்குமுனை போட்டியா... விஜய்க்கு எப்படி... : திரைப்பிரபலங்களின் கருத்து |

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்(71) நேற்றிரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன மாதிரியான பிரச்னை என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகர் ரஜினியின் திரையுலக சேவையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான, தாதா சாஹேப் பால்கே விருதை அறிவித்தது. கடந்த 25ம் தேதி டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கையால் விருது பெற்றுக் கொண்டார் ரஜினி. நேற்று முன்தினம் சென்னை திரும்பிய அவர் தனது பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் அண்ணாத்த படத்தை பார்த்தார். ‛‛அண்ணாத்த படத்தை தன்னை விட தனது பேரன் வேத் மிகவும் ரசித்ததாக ரஜினி நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 8:30 மணி அளவில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல், ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நலமுடன் உள்ளார். இன்று வீடு திரும்புவார் என, அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
![]() |