மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகர் சல்மான்கானுடன் இணைந்து நெருக்கமாக சுற்றி வந்த சமயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர். கடந்த 2022ல் சுகேஷ் என்பவர் 200 கோடி மோசடி வழக்கில் சிக்கினார். அவரிடம் இருந்து கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த நகைகள் பரிசு பொருட்களை பெற்றதாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதனை தொடர்ந்து அவருக்கு அவருடைய சொந்த நாடான பக்ரைனுக்கு செல்வதற்கு கூட நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தான் அப்ரூவராக மாறுவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இந்த மனுவை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமாலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். அது மட்டுமல்ல ஜாக்குலின் பெர்னாண்டஸ் வைத்த கோரிக்கையின் பெயரில் அவர் துபாய், ஸ்ரீலங்கா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வரும் ஏப்ரல் 24 முதல் மே 25 வரையிலான ஒரு மாத காலகட்டத்திற்குள் பயணம் செய்யவும் அனுமதி அளித்துள்ளது..