இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இடைவேளைக்கு முன் அப்பாவியாகவும் இடைவேளைக்குப்பின் அடப்பாவி என்று சொல்லும்படியாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரிது வர்மா. தற்போது, தெலுங்கில் நாக சவுர்யா ஜோடியாக அவர் நடித்துள்ள 'வருடு காவலேனு' படம் இந்த வாரம் வெளியாக இருப்பதால் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார்.
ஒரு பேட்டியின்போது கல்யாணம் சம்பந்தப்பட்ட கதைகளாகவே நடிக்கிறீர்களே, உங்கள் திருமணம் எப்போது என ரிது வர்மாவிடம் கேட்கப்பட்டது., “அப்படிப்பட்ட கதைகள் ஏதேச்சையாகவே அமைந்து விடுகின்றன. ஆனால் நிஜத்தில் இன்னும் மூன்று நான்கு வருடங்களுக்கு திருமணம் பற்றிய பேச்சே இல்லை. என்னை பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பதால் என் பெற்றோரும் திருமண விஷயத்தில் என்னை வற்புறுத்துவது இல்லை” என கூறியுள்ளார் ரிது வர்மா.