ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இடைவேளைக்கு முன் அப்பாவியாகவும் இடைவேளைக்குப்பின் அடப்பாவி என்று சொல்லும்படியாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ரிது வர்மா. தற்போது, தெலுங்கில் நாக சவுர்யா ஜோடியாக அவர் நடித்துள்ள 'வருடு காவலேனு' படம் இந்த வாரம் வெளியாக இருப்பதால் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார்.
ஒரு பேட்டியின்போது கல்யாணம் சம்பந்தப்பட்ட கதைகளாகவே நடிக்கிறீர்களே, உங்கள் திருமணம் எப்போது என ரிது வர்மாவிடம் கேட்கப்பட்டது., “அப்படிப்பட்ட கதைகள் ஏதேச்சையாகவே அமைந்து விடுகின்றன. ஆனால் நிஜத்தில் இன்னும் மூன்று நான்கு வருடங்களுக்கு திருமணம் பற்றிய பேச்சே இல்லை. என்னை பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பதால் என் பெற்றோரும் திருமண விஷயத்தில் என்னை வற்புறுத்துவது இல்லை” என கூறியுள்ளார் ரிது வர்மா.




