தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, கடந்த சில வாரங்களாகவே அவரது தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக செய்திகளில் அடிக்கடி அடிபட்டு வந்தார். கணவர் நாக சைதன்யாவுடனான பிரிவுக்குப் பின் முதல் முறையாக, தனது தோழியுடன் 'சர் தம் யாத்ரா' சென்றார். அந்த சுற்றுப் பயணம் முடிந்து ஐதராபாத் திரும்பிய சமந்தா அடுத்து ஒரு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவரது ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சாதனா சிங் ஆகியோருடன் விமான நிலைய காத்திருப்பு அறையிலிருந்து ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, 'வெளிநாடு செல்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா அவருடைய ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜுகல்கருடன் பழகிய காரணத்தால் தான் நாக சைதன்யா அவரை விட்டுப் பிரிந்ததாக சில தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.