சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2' வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த வருடம் நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலின் போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவருடைய நண்பருக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அது அவருடைய உறவினரான, தற்போதைய ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாணுடன் கசப்பை ஏற்படுத்தியது.
அதன்பின் 'புஷ்பா 2' வெளியீட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதற்காக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அப்போது பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனிடையே, தற்போது அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது அல்லு அர்ஜுன் அனுமதியுடன் நடைபெற்ற ஒன்றா என்பது இன்னும் தெரியவில்லை. இருந்தாலும் இதை அரசியல் கண்ணோட்டத்துடனும் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
நேற்று ஹைதராபாத்தில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனது ரசிகர்களை சந்தித்துப்
பேசியுள்ளார் அல்லு அர்ஜுன். அதன்பிறகே ரசிகர் மன்றம் குறித்த அறிவிப்பு
வெளியாகி உள்ளது.
இதுநாள் வரையில் தனியாக ரசிகர் மன்றம் வைத்துக் கொள்ளாத அல்லு அர்ஜுன் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது.




