சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

2026ம் வருடத்திற்கான ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொள்ள உலகெங்கிலும் இருந்து பல நாடுகள் தங்களது படங்களை தேர்வு செய்து அனுப்ப துவங்கியுள்ளன. பிரபல மலையாள இயக்குனர் இயக்கிய படம் ஒன்று 2026க்கான ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளது. ஆனால் இதில் ஆச்சரியமான ஒரு ட்விஸ்ட் உள்ளது. மலையாளத்தில் கமர்சியல் வெற்றியை கணக்கிட்டு படம் இயக்காமல் தேசிய விருது மற்றும் சர்வதேச விருதுகளை குறிவைத்து படம் இயக்கி வருபவர் டாக்டர் பைஜூ என்பவர். மலையாள காமெடி நடிகராக வலம் வந்த சுராஜ் வெஞ்சாரமூடுவை குணச்சித்திர நடிகராக்கி தேசிய விருது பெற்று தந்தவர். இவர் இயக்கியுள்ள படம் தான் ‛பாபா புக்கா' (PAPA BUKA) டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா ?
ஆம் இந்த இந்தப் படம் தயாராகி இருப்பது தமிழிலோ மலையாளத்திலோ அல்ல. ஓசானியா நாட்டிற்கு சொந்தமான பப்புவா நியூ கினியா என்கிற ஒரு தீவு நாட்டில் இருந்து தான் இந்த படம் உருவாகி உள்ளது. அந்த நாட்டில் உள்ள தயாரிப்பு நிறுவனமும் இன்னும் மூன்று இந்திய தயாரிப்பாளர்களும் சேர்ந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார்கள். அதில் ஒருவர்தான் தமிழ் இயக்குனர் பா.ரஞ்சித்.
பப்புவா நியூ கினியா, சுதந்திரம் பெற்று தற்போது ஐம்பதாவது வருடத்தை கொண்டாடி வரும் நிலையில் அந்த நாட்டிலிருந்து ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ள முதல் படம் இதுதான். அது மட்டுமல்ல ஒரு இந்திய இயக்குனர் வெளிநாட்டிற்காக படம் இயக்கி அது ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்படுவதும் இதுதான் முதல் முறை. இப்படி ரசிகர்களே கேள்விப்பட்டிராத ஒரு நாட்டில் இருந்து உருவாகி இருக்கும் படத்தில் மலையாள இயக்குனர் பைஜூவும் தயாரிப்பாளராக பா.ரஞ்சித்தும் தங்களை எப்படி இணைத்து கொண்டார்கள் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.