நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பவன் கல்யாண், அரசியல் கட்சி ஆரம்பித்து தோல்விகளை சந்தித்தவர். இருப்பினும் தனது விடாமுயற்சியால் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அவரது கட்சியை வெற்றி பெற வைத்தார். பவன் கல்யாணும் வெற்றி பெற்று துணை முதல்வராகி மக்களின் வரவேற்பைப் பெற்று வருகிறார்.
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினரும், முன்னணி நடிகருமான ஜுனியர் என்டிஆர் அவர்களது கட்சிக்காக எந்த ஒரு பிரசாரத்தையும் மேற்கொள்ளவில்லை. இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் என்டிஆர் நடித்து அடுத்த வாரம் வெளியாக உள்ள 'தேவரா 1' படத்திற்கான சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி, கூடுதல் கட்டண உயர்வுக்கு அனுமதி என ஆந்திர அரசு சார்பில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கு நன்றி தெரிவித்து சந்திரபாபு நாயுடுவுக்கும், பவன் கல்யாணுக்கும் நன்றி தெரிவித்திருந்தார் ஜுனியர் என்டிஆர். அதற்கு பவன் கல்யாண், “உங்களது பட வெளியீட்டிற்கு எனது வாழ்த்துகள் ஜுனியர் என்டிஆர் காரு. சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான என்டிஏ அரசு தெலுங்குத் திரையுலகத்திற்குத் தேவையானவற்றையும், ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 'தேவரா 1' படத் தயாரிப்பு நிறுவனத்தின் நன்றிக்கு பதிலளிக்கையில், “தனி நபர்களின் அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல் அதை மதித்து, தெலுங்கு திரையுலகத்திற்குச் சிறந்தவற்றையே செய்து வருகிறோம். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி போல திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களைத் தொந்தரவு செய்து ஒரு போதும் கீழே சாய்ந்துவிட மாட்டோம். அந்த ஆட்சியில் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பட்ட கஷ்டங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும்,” என்று காட்டமாக பதிவு செய்துள்ளார்.
முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் பவன் கல்யாணுக்கும் அவர் நடித்து வெளியான படங்களுக்கும் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.