சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் | சபரிமலை தங்கம் திருட்டு : அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர் | முதல்வரை சந்தித்த ரஜினி மகள் சவுந்தர்யா | ஏப்ரல் 27ல் 'தாய் கிழவி', தடங்கல் இல்லாமல் வெளியாகுமா? | ஏழுமலை 2ம் பாகம் பணியில் அர்ஜூன் | சென்னையில் 3 தெருக்களுக்கு இசைக் கலைஞர்கள் பெயர் | விஜய் , சிம்பு குறித்து பகிர்ந்த சீமான் | அல்லு அர்ஜுன் பற்றிய பேச்சு: வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட காவேரி பரூவா |

தெலுங்கில் இப்போதும் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் சிரஞ்சீவி, இளம் படைப்பாளிகளின், வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அப்படி முற்றிலும் புதுமுகங்கள் பங்களிப்பில் உருவாகியுள்ள 'பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ' என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் தனது ஆச்சார்யா படத்தின் தோல்வி குறித்தும் நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, 'புதுமுகங்கள் நடித்த படம் தானே, தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்களா என்பதை பற்றி கவலைப்பட தேவையில்லை. நல்ல கன்டெண்ட் இருந்தால் நிச்சயமாக தியேட்டருக்கு மக்கள் வருவார்கள். சமீபத்தில் அப்படி வெளியான பிம்பிசாரா, சீதாராமம், கார்த்திகேயா 2 ஆகிய படங்கள் இரண்டரை மணி நேரம் ரசிகர்களை இருக்கையில் அமரவைத்து படம் பார்க்க வைக்கும் விதமாக இருந்தது. கன்டன்ட் தான் அதற்கு காரணம். கன்டென்ட் இல்லை என்றால் இரண்டாவது நாளே தியேட்டர் காலியாகிவிடும். அது என் படமாக இருந்தாலும் கூட அதுதான் ரிசல்ட். அப்படி சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்” என்று சமீபத்தில் வெளியான தனது ஆச்சார்யா, படத்தின் தோல்வி குறித்து பேச்சுவாக்கில் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார் சிரஞ்சீவி.




