அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

தெலுங்கில் சுகுமார் டைரக்சனில் அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள படம் புஷ்பா. செம்மரக்கடத்தல் பின்னணியில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என்கிற பெயரில் வரும் டிச-17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் சேர்த்து பான் இந்தியா படமாக இது வெளியாகிறது.
அந்தவகையில் இதன் மலையாள பதிப்பில் அல்லு அர்ஜுனுக்காக குரல் கொடுத்து தனது டப்பிங் பணியை முடித்துள்ளார் மலையாள இயக்குனர் ஜிஸ் ஜாய். அல்லு அர்ஜுன் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமான கங்கோத்ரி படம் முதற்கொண்டு தற்போது புஷ்பா வரை இவர் தான் அவருக்காக குரல் கொடுத்து வருகிறார்.
இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அடிப்படையில் டப்பிங் கலைஞரான ஜிஸ் ஜாய், 2003ல் அல்லு அர்ஜுனின் கங்கோத்ரி படத்திற்கு மலையாளத்தில் டப்பிங் பேசியதன் மூலமாகத்தான் சினிமாவிலேயே நுழைந்தார். அதன்பின்னர் பத்து வருடங்கள் கழித்து இயக்குனராக அவதாரம் எடுத்த இவர், இதுவரை நான்கு படங்களை இயக்கியுள்ளார். டைரக்சனில் இறங்கிய பின் டப்பிங் பேசுவதை குறைத்துக் கொண்டாலும் தனக்கு சினிமாவில் அடையாளம் கிடைக்க காரணமாக இருந்தவர் என்பதால் அல்லு அர்ஜுன் படங்களுக்கு மட்டும் விடாமல் தொடர்ந்து டப்பிங் பேசி வருகிறார்.