ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிரிக்கெட் பற்றியோ, கிரிக்கெட் வீரர்கள் பற்றியோ படம் எடுத்தால் மினிமம் கியாரண்டி என்கிற நிலை ஹிந்தி படங்களுக்கு இப்போது இருக்கிறது. அதனால் கிரிக்கெட் வீரர்கள் பற்றி படம் எடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாறு ஏற்கனவே திரைப்படமாக வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பினை பெற்றது. கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்ற நிகழ்வை மையப்படுத்தி உருவாகி உள்ள 83 என்ற படம் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவருமான கங்குலியின் வாழ்க்கையும் சினிமாவாகிறது. பல ஆண்டுகளாக யூக செய்தியாக உலவிக் கொண்டிருந்த இதனை கங்குலி இப்போது உறுதி செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் "எனது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க தொடர்ந்து அனுமதி கேட்டு வந்தார்கள். இப்போது அதற்கு அனுமதி அளித்திருக்கிறேன். அது ஹிந்தியில் எடுக்கப்படுகிறது. இயக்குனர் யார், தயாரிப்பாளர் யார் என்பதை படம் எடுப்பவர்கள் அறிவிப்பது தான் முறையானது. அதற்கு சில நாட்கள் ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கங்குலியாக நடிக்க ரன்பீர் கபூர் தயாராகி வருகிறார் என்றும், 250 கோடி பட்ஜெட்டில் இப்பட தயாரிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.