காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

சினிமாவில் வில்லன் நடிகராக அறியப்பட்டாலும் நிஜத்தில் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார் சோனுசூட். காரணம் கொரோனா காலத்தில் அவர் ஆற்றிய பணிகள். கொரோனா முதல் அலையின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பஸ், ரயில், விமானத்தில் ஏற்றி அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். இரண்டாவது அலையில் ஆக்சிஜன் வங்கிகளை ஏற்படுத்தி பணியாற்றி வருகிறார். இதுதவிர ஏராளமான உதவிகளை அவர் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் திடீரென முட்டை, ரொட்டி விற்கும் வியாபாரத்தில் இறங்கி விட்டார். தனது வீட்டில் தினமும் சைக்கிளில் முட்டை மற்றும் பிரட்டுகளை எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக சென்று விற்று வருகிறார். மற்ற பணிகள் எல்லாம் சரி. இது விளம்பரத்துக்காக செய்கிறார் என்று சிலர் நினைக்கலாம்.
அவர் தரும் விளக்கம் இது: இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை கொரோனா பணிகளுக்கு பயன்படுத்த இருக்கிறேன். அதைவிட முக்கியமாக இந்த கொரோனா காலத்தில் பலரும் வேலை இழந்திருக்கிறார்கள். அவர்கள் இதுபோன்ற சிறுசிறு வியாபாரத்தில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கை பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும். அதற்கு அவர்களுக்கு தயக்கமோ, வெட்கமோ இருக்ககூடாது என்பதற்காக நானே முன்மாதிரியாக இருந்து செய்து காட்டுகிறேன். என்கிறார் சோனுசூட்.




