அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
எப்.டி.ஐ.ஐ., எனப்படும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மையத்தின் தலைவர் பொறுப்பை பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ராஜினாமா செய்தார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான நடிகர், இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி அளிக்கும், எப்.டி.ஐ.ஐ., தலைவராக, பிரபல பாலிவுட் நடிகர் அனுபவம் கெர், கடந்தாண்டு அக்டோபரில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்வதாக, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர், ராஜ்யவர்தன் சிங் ரதோருக்கு அனுபம் கெர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர், கூறியுள்ளதாவது: சர்வதேச, டிவி நிகழ்ச்சிக்காக, அமெரிக்காவில் தொடர்ந்து ஒன்பது மாதங்கள் தங்கியிருக்க வேண்டியுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இதேபோன்று, தொடர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலையில், மையத்தின் தலைவராக தொடர்வது, முறையானதல்ல. அது மாணவர்களுக்கும், நிர்வாகத்துக்கும், சிரமத்தை ஏற்படுத்தும். அதனால், இந்தப் பதவியில் இருந்து விலகுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.