ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படம் தற்போதைக்கு 'ஏஏ-22 ஏ-6' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதாவது அல்லு அர்ஜூனின் 22வது படம், அட்லியின் 6வது படம். இந்த படத்தில் தீபிகா படுகோனேவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தீபிகாவின் கணவரான நடிகர் ரன்வீர் சிங் தான் அளித்த ஒரு பேட்டியில், இயக்குனர் அட்லியை மசாலாவின் ராஜா என்று பாராட்டியுள்ளார். அதோடு அட்லியின் தனித்துவமான பார்வை மற்றும் படைப்பாற்றல் மிகச் சிறப்பாக உள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அவர் இயக்கி வரும் படத்தில் சிலிர்ப்பூட்டும் காட்சிகள் மற்றும் இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத கதையுடன் ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கப் போகிறது.
விஜய் நடிப்பில் அவர் இயக்கிய 'மெர்சல்' படத்திலிருந்தே நான் அட்லியின் ரசிகராகி விட்டேன். இந்திய சினிமாவில் மிகவும் உற்சாகமாக திறமையான ஒரு இயக்குனர் அட்லி. எதிர்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார் ரன்வீர் சிங்.




