நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
மலையாள திரையுலகில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பிரபல குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக நடித்து வருபவர் சித்திக். கடந்த வருடம் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு சினிமா சார்ந்த பல பெண்கள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நடிகர்களில் சித்திக்கும் ஒருவர். நடிக்கும் ஆர்வத்துடன் வந்த இளம்பெண் ஒருவரை நடிகர் சித்திக் தான் நடித்த படம் ஒன்றின் பிரிவியூ காட்சி பார்க்கும்படி அழைத்ததாகவும் அதை பார்த்த பிறகு அது குறித்து விவாதிக்க தன்னை தான் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு வரச் சொன்னதாகவும் அங்கு சென்றபோது தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் காவல்துறையில் அந்த பெண் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் சித்திக் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தான் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகி இருந்த படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் அதற்கு அனுமதி வழங்கும்படியும் தன்னுடைய பாஸ்போர்ட்டை தன்னிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் நடிகர் சித்திக்.
இதனை விசாரித்த நீதிமன்றம் வரும் செப்டம்பர் 19 முதல் 24 வரை அரபு நாடுகளுக்கு சென்று வரவும் அக்டோபர் 13 முதல் 18 வரை கத்தாருக்கு சென்று வரவும் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் ஒவ்வொரு முறை அவர் வெளிநாட்டுக்கு சென்று திரும்பியதும் தனது பாஸ்போர்ட்டை காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் விதித்துள்ளது.