கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! |
காப்புரிமை தொடர்பாக, 'சோனி' நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது, இசையமைப்பாளர் இளையராஜா பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
பாடல்கள் காப்புரிமை தொடர்பாக பதிவு செய்த ஒப்பந்தங்களை மீறி செயல்பட்டதால் இசையமைப்பாளர் இளையராஜாவின், 'இளையராஜா மியூசிக் என்டர்டெய்ன்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்திற்கு நிரந்தர தடை விதிக்கக்கோரி, 'சோனி' நிறுவனம், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே வேறு ஒரு விவகாரத்தில், 'சோனி' நிறுவனத்திற்கு எதிராக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, 'சோனி' நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சோனி' நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ''தற்போது தாக்கல் செய்யப்பட்டு இருப்பது வேறு திரைப்படங்கள் தொடர்புடைய புதிய வழக்கு. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா தொடர்ந்த வழக்கை, மூல வழக்கு நடக்கும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்'' என கோரிக்கை வைத்தார்.
'இந்த கோரிக்கையை நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே முன் வைக்கலாமே' என, தலைமை நீதிபதி கேட்டபோது, ''அப்படியானால் எங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்,'' என, சிங்வி கோரிக்கை விடுத்தார்.
'எதிர்மனுதாரரை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என, திட்டவட்டமாக கூறிய தலைமை நீதிபதி, 'இது தொடர்பாக இளையராஜா தரப்பு மூன்று வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்' என, நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்தி வைத்தார்.