மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
பாலிவுட் நடிகர் சைப் அலிகான் மும்பையில் அவரது வீட்டில் இருந்தபோது கடந்த 16ம் தேதி நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அவரை கத்தியால் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து சைப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு நேற்று பிற்பகல் சைப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சைப் அலிகானுக்கு கத்தி குத்து ஏற்பட்ட சமயம் அவரை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சரியான நேரத்தில் உயிரை காப்பாற்றியவர் ஆட்டோ டிரைவர் பஜன்சிங் ராணா. அந்த சமயத்தில் அவர் பணம் கூட வாங்கவில்லை. இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் முன் பஜன்சிங் ராணாவை மருத்துவமனையிலேயே சந்தித்துள்ளார் சைப். அதோடு அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கி சைப் கவுரவித்தார்.