தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சத்தா திரைப்படத்தை தொடர்ந்து வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கடந்த பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற தாரே ஜமீன் பார் படத்தின் இரண்டாம் பாகமாக சித்தாரே ஜமீன் பார் என்கிற படத்தில் தான் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார் ஆமீர்கான். ஆனால் கொஞ்ச காலத்திற்கு அவர் நடிப்பை விட்டு ஒதுங்கி இருக்க முடிவு செய்துவிட்டார். காரணம் அவரது அம்மாவின் உடல்நிலை தான். அவரது அம்மா ஜீனத் ஹுசைன் கடந்த வருடம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு சென்னையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் தனது தாயை அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதற்காக சில மாதங்களுக்கு சென்னைக்கே தனது இருப்பிடத்தை மாற்ற முடிவு செய்துள்ளார் ஆமீர்கான். இதற்காக சம்பந்தப்பட்ட அந்த மருத்துவமனைக்கு அருகிலேயே இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க முடிவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தனது தாயின் உடல் நிலையை பராமரிக்க சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் ஓய்வு எடுக்கிறேன் என்று ஆமீர்கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




