பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சல்மான்கான். இவருக்கு கடந்த ஜூன் மாதம் லாரன்ஸ் பிஸ்நாய் என்கிற தாதாவின் கும்பலிடமிருந்து உயிருக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக மிரட்டல் எடுக்கப்பட்டது. குறிப்பாக பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் சித்து மூஸ்வாலா என்பவர் இந்த கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தான் இவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் அந்த கும்பலை சேர்ந்த பல நபர்களை கைது செய்து போலீசார் விசாரித்தபோது சல்மான்கான் உயிருக்கு குறி வைத்திருப்பதாகவும் ஏற்கனவே அவர் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாகவும் பலரும் வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.
அதனடிப்படையில் மகாராஷ்டிரா போலீஸ் சல்மான்கானுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகிறது. இடையில் அவரது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ளவும் உரிமம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் இவரது பாதுகாப்பை தற்போது ஒய் பிளஸ் பிரிவுக்கு உயர்த்தியுள்ளது மகாராஷ்டிர அரசு. இதன்படி சல்மான்கானுக்கு பாதுகாப்பாக அவருடன் எந்நேரமும் ஆயுதம் ஏந்திய நான்கு பாதுகாப்பு வீரர்கள் உடன் இருப்பார்கள். அதேசமயம் இந்த பாதுகாப்புக்கான செலவை சல்மான்கானே ஏற்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.