ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையான சோனம் கபூர் திருமணத்திற்கு பிறகு டில்லியில் கணவருடன் வசித்து வருகிறார். கர்ப்பிணியாக உள்ள இவர், சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கர்ப்பகால போராட்டம் பற்றியும், அது எவ்வளவு கடினம் நிறைந்தது என்பது பற்றியும் வெளிப்படையாக பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி இவரது வீட்டில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது. சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னர், கடந்த பிப்ரவரி 23ம் தேதி அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரில், வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.