ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையான சோனம் கபூர் திருமணத்திற்கு பிறகு டில்லியில் கணவருடன் வசித்து வருகிறார். கர்ப்பிணியாக உள்ள இவர், சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கர்ப்பகால போராட்டம் பற்றியும், அது எவ்வளவு கடினம் நிறைந்தது என்பது பற்றியும் வெளிப்படையாக பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி இவரது வீட்டில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது. சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னர், கடந்த பிப்ரவரி 23ம் தேதி அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரில், வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.