ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக C.வெங்கிடுபதி, S.பாலசுப்ரமணியம், K.A.சசிபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படத்திற்கு “ திருட்டுக்கல்யாணம் “ என்று பெயரிட்டுள்ளனர்.
கதாநாயகனாக ரங்காயாழி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.இவர் வழக்கு எண் 18/9 படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தவர். கதாநாயகியாக தேஜஸ்வீ அறிமுகமாகிறார்.இவர் மூடர்கூடம் படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தவர். மற்றும் ஆடுகளம்நரேன், பசங்க செந்தி, தம்பிராமையா, தேவதர்ஷினி இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குனர் A.வெங்கடேஷ் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - கார்த்திக் நல்லமுத்து ( இவர் ரத்னவேலுவின் உதவியாளர்), இசை - வைத்தி
கலை - A. பழனிவேல் ( இவர் வைரபாலனின் உதவியாளர்), எடிட்டிங் - சஷிகுமார் ( இவர் டான்மேக்ஸ் உதவியாளர்), தயாரிப்பு நிர்வாகம் - ஜெய்ராம், தயாரிப்பு - ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் - ஷக்திவேலன் (இவர் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சசி போன்றவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி இயக்குனர் ஷக்திவேலனிடம் கேட்டோம்........ திருட்டுக்கல்யாணம் பண்ணிக்கிறமா? திருக்கல்யாணம் பண்ணிக்கிறமா? என்பது முக்கியமல்ல .. கல்யாணம் பண்ணிகிறதும் சந்தோஷமா வாழ்றதும் தான் முக்கியம் என்ற கருத்தை மையமாக வைத்துதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக டெஸ்ட் சூட் பண்ணும்போதே படத்திற்க்காக பேசப்பட்ட முழு தொகையையும் பெற்றுக் கொண்ட நாயகன், நாயகி இவர்களாகத்தான் இருப்பார்கள். படத்தின் படப்பிடிப்பு கோவை, கடலூர், சென்னையை தொடர்ந்து கடப்பாவிலும் நடைபெற்றுக் கொண்டிருகிறது என்றார் இயக்குனர் ஷக்திவேலன்.