Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

பாம்பே வெல்வெட் (ஹிந்தி்)

பாம்பே வெல்வெட் (ஹிந்தி்),Bombay velvet (Hindi)
  • பாம்பே வெல்வெட் (ஹிந்தி்)
  • ரன்பீர் கபூர்
  • அனுஷ்கா சர்மா
15 மே, 2015 - 12:52 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » பாம்பே வெல்வெட் (ஹிந்தி்)

நண்பர்களான ஜானி பால்ராஜ் (ரன்பீர் கபூர்), ஷிமன் (சத்யதீப் மிஸ்ரா) இருவரும், சிறு அளவிலான தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாள், பெரிய அளவில் திருட திட்டமிடும் அவர்கள், தங்க பிஸ்கெட்டுகளை கடத்தியும் விடுகின்றனர். இந்த கடத்தலின் போதும் அவர்கள் பிடிபட்டும் விடுகின்றனர். ஜானி, அதிர்ஷ்டவசமாக, போலீசிடம் தப்பித்ததோடு மட்டுமல்லாது, தங்க பிஸ்கெட்டுகளையும் தன்னுடன் கொண்டு சென்று விடுகிறார். அந்த தங்க பிஸ்கெட்டுகளை, யாருக்கும் தெரியாமல், தனது வீட்டிற்குள்ளேயே பதுக்கி வைக்கிறார். இதனிடையே, பெரிய தொழிலதிபரான கைஜாத் காம்பட்டா ( கரன் ஜோஹர்)வின் விலைமதிப்பு மிக்க சொத்துகளை திருட திட்டம் தீட்டுகிறார் ஜானி. திருட முயற்சிக்கும்போது, காம்பட்டாவிடம் கையும் களவுமாக சிக்குகிறார். ஆனால், காம்பட்டா எதிர்பார்த்ததுபோல் அல்லாமல், அவரை தண்டிக்காமல், தனக்கு கீழே வேலை செய்யுமாறு பணிக்கிறார். அதற்கு, ஜானியும் உடன்படுகிறார். காம்பட்டாவின் பாம்பே வெல்வெட் கிளப்பிற்கு, ஜானியை, காம்பட்டா மானேஜராக நியமிக்கிறார். லோக்கல் பப்களி்ல், பாட்டு பாடும் ரோஸி நோரன்ஹா (அனுஷ்கா சர்மா) மீது, ஜானி காதல்வயப்படுகிறார். பின், ரோஸியை, பாம்பே வெல்வெட் கிளப் பாடகியாக பதவியும் கிடைக்க ஜானி வழிவகுக்கிறார். ரோஸி, காம்பட்டாவின் தொழில்போட்டியாளரான ஜிம்மி (மணீஷ் சவுதாரி)யின் அடியாள் ஆகும். காம்பட்டாவை தோற்கடிக்கும் பொருட்டு, வழி வகுக்கும் விதமாகவே, ஜிம்மி, ரோஸியை அனுப்பியிருக்கிறார். இந்நிலையில், ஜானி, மத்திய மந்திரியின் சொத்துகளை திருட முயற்சிக்கிறார். இதற்கான போட்டோக்கள், குறிப்புகளை, ஜானியிடமிருந்து, ரோஸி திருட முயற்சிக்கிறார். ரோஸி அதை திருடினாரா?... காம்பட்டாவை, ஜிம்மி தோற்கடித்தாரா?...ஜானி - ரோஸியின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை...


தன்னுடைய புதுமையான இயக்கம், வேறுபட்ட கதையமைப்பின் மூலம், பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் இடத்தில் உள்ள அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம். இந்த படத்திற்காக, 1960ம் ஆண்டுகளில் இருந்த பாம்பே நகரத்தை, செட் மூலம் நம் கண்முன்னே நிறுத்தி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இந்த செட் போடவே, 11 மாதங்கள் ஆகியிருந்தது. இந்த பாம்பே செட், இலங்கையில், 9.5 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டிருந்தது. 1960ம் ஆண்டில் இருந்த பாம்பே தான், படம் பார்ப்பவர்களை கொள்ளை கொள்கிறது என்றால், பாடல்களும், அந்த ஆண்டுகளில் இருந்தவையாகவே உருவாக்கப்பட்டுள்ளது.


ரன்பீருடன், அனுஷ்கா, முதன்முதலாக இந்த படத்தில் இணைந்துள்ளார். குத்துச்சண்டை வீரர் கேரக்டரில் ரன்பீரும், ஜாஜ் பாடகி கேரக்டரில் அனுஷ்கா சர்மாவும் நடித்துள்ளார்கள் என்பதைவிட, வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.


பாம்பே எப்படி மும்பை ஆனது என்பதை தெரிந்துகொள்வதற்காக வேண்டுமென்றால் இப்படத்தை பார்க்கலாம்....



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in