"காசி", "என் மனவானில்", "நாளை நமதே", "அற்புத தீவு" போன்ற வெற்றி படங்களை இயக்கிய டைரக்டர் வினயன், அடுத்து 5வது இயக்கும் படம் "காதல் வேதம்". மலையாள மொழி திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் வினயன், இதுவரை இயக்கிய 35 படங்களும் வசூலில் சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் வேருன்றி இருக்கும் வன்முறையையும், பயங்கரவாதத்தையும் அதை எதிர்த்து போராடுவதுமே காதல் வேதம் படத்தின் கதை. படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பது போன்று தோன்றும். ஆனால் இந்த காதலுக்கு பின்னால் பயங்கரவாதம் எந்த விதத்தில், அந்த காதலை நசுக்கப் பார்க்கிறது என்பதை வித்யாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் வினயன்.
முரளி கிருஷ்ணா என்ற புதுபுகம் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் கெளதம் என்ற கதாநாயகனும் நடிக்கிறார். "காதல் சொல்ல வந்தேன்" படத்தின் நாயகி மேக்னா சுந்தர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் திலகன், சாருஹாசன், லட்சுமி, ஜார்ஜ், கிரிஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரியனின் பாடல் வரிகளுக்கு சாஜன் மாதவ் இசையமைக்கிறார். இவர் இசையமைப்பாளர் ரவிந்தரனின் மகன். நவாஸ் ஒளிப்பதிவு செய்ய, இ.எம்.எஸ்.ராஜா வசனம் எழுதியுள்ளார். கதை, திரைக்கதை எழுதி இயக்குவதுடன் ஆகாஷ் பிலிம்ஸ் சார்பில் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார் வினயன்.