
நடிகை எடுத்த முடிவால் தடுமாறும் கணவர் இயக்குனர்
தன் கணவர் இயக்கும் படங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் அந்த படங்களை தயாரிப்பதை தவிர்த்து வந்த, தாரா நடிகை, சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ஒரு படத்தை தயாரித்து நஷ்டத்தை சந்தித்திருக்கிறார். குறிப்பாக, ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து அந்த படத்தை தயாரித்த நிலையில், நஷ்ட கணக்கில் பெரும் பங்கை, தாராவின் தலையில் கட்டி விட்டனர். இதனால், கணவர் மீது கொலவெறியில் இருந்து வரும், அம்மணி, "இனிமேல் நீங்கள் இயக்கும் எந்த படத்தையும் நான் தயாரிக்க மாட்டேன்..." என்று கணவரிடம் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால், தன் அடுத்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் தடுமாறி வருகிறார், தாராவின் ஆத்துக்காரர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!