
பழிவாங்க முடிவெடுத்த தளபதி நடிகர்
மார் 22, 2026
Advertisement
மாநில அரசு மட்டுமின்றி, மத்திய அரசையும், "அட்டாக்" செய்து, தளபதி நடிகர் நடித்துள்ள கடைசி படத்துக்கு சென்சார் போர்டு, "செக்" வைத்த நிலையில், அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு போன தளபதி நடிகருக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கடைசியில் தணிக்கை குழுவிடம், சரண்டர் ஆன பட குழுவுக்கு மேலும் மிகப்பெரிய அதிர்ச்சி கொடுக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளதாம்.
அதாவது, அப்படத்தில் அரசியல் கட்சிகளை தோலுரிக்கும் வகையில், தளபதி நடித்த காட்சிகளை கத்தரித்து விட்டனர். இதனால், கடும் கோபத்துக்கு ஆளான, தளபதி நடிகர், "என்னை திட்டம் போட்டு பழிவாங்கியவர்களை பழிக்கு பழி வாங்காமல் விடவே மாட்டேன்..." என்று ஆவேசத்தில் கொந்தளித்து வருகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!