
படத்தில் முக்கியத்துவம் இல்லாததால் பழிவாங்கும் நடிகை
செப் 20, 2026
Advertisement
தமிழில், முதன் முதலாக, அமரன் நடிகர் படத்தில் நடிக்க வந்த, அந்த மூன்றெழுத்து தெலுங்கு நடிகை, தற்போது சுள்ளானுடன், இரண்டெழுத்து படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால், அந்த மூன்றெழுத்து நடிகையை, ஓரங்கட்டி விட்டு இதே படத்தில் நடிக்கும், மற்றொரு நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு, பாடல் காட்சியில், "டூ--பீஸ்" நடிகையாகவும் தோலுரித்து விட்டனர்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மூன்றெழுத்து நடிகை, "படத்தில் ஒப்பந்தமாகும் போது இரண்டு, "ஹீரோயின்"களுக்கும் முக்கியத்துவம் உள்ளது என்று சொல்லி விட்டு, இப்போது என்னை மட்டும் இருட்டடிப்பு செய்துவிட்டீர்கள்..." என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதோடு, படப்பிடிப்புக்கு, "கால்ஷீட்" கொடுத்தபடி ஆஜராகாமல், படக்குழுவினரை பழி வாங்கி வருகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!