தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான மிலா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகி வந்தது. இதற்கிடையில் மிலாவும் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் கேமராவை முத்தம் கொடுப்பது போல் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவர் கண்டிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பார் என பலரும் கருதி வந்த நிலையில் அவர் விலக்கப்பட்டுள்ளார். பிக்பாஸில் கலந்து கொள்ளாதது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மிலா அதை பற்றி எதுவும் கேட்காதீர்கள் என அப்செட்டாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் அவர் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிகள் படி இந்த சீசனில் ஒரு திருநங்கை மட்டுமே கலந்து கொள்ள முடியும். அந்த வகையில் நமிதா மாரிமுத்து மிலாவை விட பிரபலமானவர். மேலும் 2014 ஆண்டு திருநங்கைகளுக்கான மிஸ் சென்னை போட்டியில் டைட்டில் வென்றுள்ளார். மேலும் 2018-ல் மிஸ் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரணங்களுக்காக தான் மிலா விலக்ப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையில் மிலா என்ட்ரி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.