ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
டிவி சீரியல்களில் அதிக ரசிகர்களை கொண்ட தொடர்களில் ஒன்று 'சந்திரலேகா'. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே வேறு எந்த சீரியலும் தொடாத அளவிற்கு 2000 எபிசோடுகளை கடந்து இமாலய சாதனையும் படைத்துள்ளது. தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடர் முடிவுக்கு வருகிறது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்பது போல் கதையின் நாயகிகள் இண்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை செய்துள்ளனர்.
சந்திரலேகா தொடரில் ஸ்வேதா பண்டேகர், நாகஸ்ரீ, சந்தியா மற்றும் ராணி ஆகிய நடிகைகள் தான் மெயின் கதாபாத்திரங்களில் நடித்து கதையை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில் சந்திரலேகா தொடர் 2000 எபிசோடுகளை கடந்துள்ளதை கொண்டாடும் வகையில் நால்வரும் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு கேப்ஷனில் இன்னும் இருக்கிறது என பதிவிட்டுள்ளனர். ஒருபுறம் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சி தான் என்றாலும் கதையை எப்பதான் முடிப்பீங்க என கேள்விகளும் கேட்டு வருகின்றனர்.