ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ஒரு காலத்தில் டிஆர்பியில் முன்னணியில் இருந்தது. இந்த தொடரில் ஆதியாக கார்த்திக் ராஜ் நடித்து வந்தார். ஆதி - பார்வதியின் காம்போவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்த நிலையில் கார்த்திக் ராஜ் தொடரிலிருந்து வெளியேறினார். அதன் பின் ஆதியாக விஜே அக்னி நடித்து வருகிறார் இருப்பினும் பெரிய அளவில் ஹிட் கொடுக்க முடியாமல் சீரியல் குழு திணறி வருகிறது. அதேபோல் பார்வதியை அகிலா மருமகளாக ஏற்றுக் கொண்டால் சீரியல் முடிந்துவிடும் என்பதால் அரைத்த மாவையே அரைத்து வருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. எனவே, செம்பருத்தி தொடரை முதல் எபிசோடில் இருந்து மீண்டும் ஒளிபரப்ப ஜீ தமிழ் சேனல் முடிவு செய்து இருக்கிறது. அதனால் ஆதியாக கார்த்திக் ராஜ் நடித்த காட்சிகளை மீண்டும் பார்க்கலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.