ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ஒரு காலத்தில் டிஆர்பியில் முன்னணியில் இருந்தது. இந்த தொடரில் ஆதியாக கார்த்திக் ராஜ் நடித்து வந்தார். ஆதி - பார்வதியின் காம்போவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்த நிலையில் கார்த்திக் ராஜ் தொடரிலிருந்து வெளியேறினார். அதன் பின் ஆதியாக விஜே அக்னி நடித்து வருகிறார் இருப்பினும் பெரிய அளவில் ஹிட் கொடுக்க முடியாமல் சீரியல் குழு திணறி வருகிறது. அதேபோல் பார்வதியை அகிலா மருமகளாக ஏற்றுக் கொண்டால் சீரியல் முடிந்துவிடும் என்பதால் அரைத்த மாவையே அரைத்து வருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. எனவே, செம்பருத்தி தொடரை முதல் எபிசோடில் இருந்து மீண்டும் ஒளிபரப்ப ஜீ தமிழ் சேனல் முடிவு செய்து இருக்கிறது. அதனால் ஆதியாக கார்த்திக் ராஜ் நடித்த காட்சிகளை மீண்டும் பார்க்கலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.