'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

தொலைக்காட்சி பிரபலமான ஜாக்குலின் விஜய் டிவியில் தேன்மொழி பி.ஏ என்கிற தொடரில் நடித்து வந்தார். இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்கு பின் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வர சீரியல் குழு முடிவு செய்திருந்தனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகவும் சீரியலுக்கான ஸ்லாட் கிடைக்காது என்பதால், தொலைக்காட்சி நிறுவனமும் இந்த தொடரை முடித்து விடும் என்றே எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில், இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் இனி மதியம் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிப்பு வெளியாகிவுள்ளது. இதனால் சீரியல் முடிவை நோக்கி செல்லாமல் நீட்டிக்கப்படுகிறது என்பதும் உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக ஜாக்குலின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




