ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தொலைக்காட்சி செய்தி வாசிப்பளரான சரண்யா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது (2015) என்ற படத்தின் மூலம் திரையில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆயுத எழுத்து' தொடரின் மூலம் சின்னத்திரையிலும் நுழைந்தார். இவர் கடைசியாக நடித்து வந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' தொடர் திடீரென நிறுத்தப்பட்டது. அதன்பிறகு திரையில் தோன்றாத சரண்யா சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.
அதேசமயம் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா படு சுட்டியாக போஸ்டுகளை போட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் தனது பழைய போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆறு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் மராத்தி பெண் போல் உடையணிந்திருக்கும் சரண்யா, மீனவர் துறைமுகத்தில் படகுகளுக்கு நடுவே தேவதை போல் அமர்ந்திருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.