கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
தொலைக்காட்சி செய்தி வாசிப்பளரான சரண்யா, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது (2015) என்ற படத்தின் மூலம் திரையில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஆயுத எழுத்து' தொடரின் மூலம் சின்னத்திரையிலும் நுழைந்தார். இவர் கடைசியாக நடித்து வந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' தொடர் திடீரென நிறுத்தப்பட்டது. அதன்பிறகு திரையில் தோன்றாத சரண்யா சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.
அதேசமயம் சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா படு சுட்டியாக போஸ்டுகளை போட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் தனது பழைய போட்டோஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆறு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் மராத்தி பெண் போல் உடையணிந்திருக்கும் சரண்யா, மீனவர் துறைமுகத்தில் படகுகளுக்கு நடுவே தேவதை போல் அமர்ந்திருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.