'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள புதிய சீரியலில் நீச்சல் வீராங்கனை ஜனனி நடிகையாக அறிமுகமாகிறார். இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் நேயர்களின் ஆதரவையும் கேட்டுள்ளார்.
நடிகர் நடிகைகளுக்கு வெள்ளித்திரையை விட அதிக புகழ் தரும் புகலிடமாக மாறிக் கொண்டிருக்கிறது சின்னத்திரை. இன்னொருபுறம் தொலைக்காட்சிகளும் டி ஆர் பி போட்டியில் சீரியல்களை எடுத்து குவித்து வருகின்றனர். இதனால் நடிக்கும் ஆர்வமுள்ள பலருக்கும் திரையில் தோன்றும் வாய்ப்பை சின்னத்திரை எளிமைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது நடிகையாக அறிமுகமாகிறார் ஜனனி பிரபு.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அழகி போட்டியில் மிஸ் சென்னை பட்டம் வென்ற ஜனனி ஒரு நீச்சல் வீராங்கனையும் கூட. மாடலிங் துறையில் சீரியஸாக முயற்சி செய்து கொண்டே நீச்சல் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். ஜனனி தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நினைத்தாலே இனிக்கும் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். இந்த தொடரில் நளினி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் ஜனனி நடிக்கவுள்ளார்.
நினைத்தாலே இனிக்கும் தொடரின் மெகா லாஞ்ச் நிகழ்ச்சி சமீபத்தில் ஜி தமிழ் ஸ்டுடியோவில் நடந்தது. அதன் புகைப்படங்களை தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட ஜனனி, நடிகையாக களமிறங்கும் தனக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.
நினைத்தாலே இனிக்கும் தொடர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.