அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
ஒரு காலத்தில் சினிமா 100 நாட்கள் ஓடினால் கேக் வெட்டி வெற்றி விழா கொண்டாடுவார்கள். இப்போது சீரியில் 100 எபிசோடை கடந்தால் வெற்றியை கொண்டாடுகிறார்கள். காரணம் இப்போது தொடங்கப்படும் பல சீரியல்கள் டிஆர்பியில் உரிய இடத்தை பெறாவிட்டால் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்பட்டு அப்படியே ஓரம்கட்டப்பட்டு காணாமலும் போய்விடுகிறது. எனவே ஒரு தொடர் 100 எபிசோடை ஒரே ஒளிபரப்பு நேரத்தில் கடப்பதே சாதனை ஆகிவிட்டது.
அந்த வரிசையில் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கப்பட்ட ராஜபார்வை தொடர் 100 எபிசோட்களை கடந்து இருக்கிறது. அதில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் இதனை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதில் முனிப் ரகுமான், ராஷ்மி ஜெயராஜ், விகாஷ் சம்பத், கீர்த்தி விஜய், யாழினி ராஜன், ஆர்த்தி ராம்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். பார்வையற்ற இளைஞனுக்கும், ஒரு கிராமத்து பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்ட தொடர்.