துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ஒரு காலத்தில் சினிமா 100 நாட்கள் ஓடினால் கேக் வெட்டி வெற்றி விழா கொண்டாடுவார்கள். இப்போது சீரியில் 100 எபிசோடை கடந்தால் வெற்றியை கொண்டாடுகிறார்கள். காரணம் இப்போது தொடங்கப்படும் பல சீரியல்கள் டிஆர்பியில் உரிய இடத்தை பெறாவிட்டால் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்பட்டு அப்படியே ஓரம்கட்டப்பட்டு காணாமலும் போய்விடுகிறது. எனவே ஒரு தொடர் 100 எபிசோடை ஒரே ஒளிபரப்பு நேரத்தில் கடப்பதே சாதனை ஆகிவிட்டது.
அந்த வரிசையில் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கப்பட்ட ராஜபார்வை தொடர் 100 எபிசோட்களை கடந்து இருக்கிறது. அதில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் இதனை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இதில் முனிப் ரகுமான், ராஷ்மி ஜெயராஜ், விகாஷ் சம்பத், கீர்த்தி விஜய், யாழினி ராஜன், ஆர்த்தி ராம்குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். பார்வையற்ற இளைஞனுக்கும், ஒரு கிராமத்து பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்ட தொடர்.