‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
நடிகை ராதிகா நடித்த சித்தி தொடர் சின்னத்திரை வரலாற்றில் மிக முக்கியமான தொடராகும். மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற முதல் சிரியல். அதன்பிறகு அண்ணாமலை, அரசி, வாணி ராணி, செல்லமே, தாமரை, செல்வி என வரிசையாக ராதிகா நடித்த அத்தனை சீரியல்களும் ஹிட்டானது. அவர் நடித்த சந்திரகுமாரி என்ற சரித்திர தொடர் மட்டும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் தான் அவர் சித்தி சீரியலின் 2ம் பாகத்தை துவக்கினார். அதுவும் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் தற்போது ராதிகா அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி விட்டார். அவரது கணவர் நடத்தும் சமத்துவ மக்கள் கட்சியின் பெண்கள் பிரிவின் தலைவியாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார். வருகிற சட்டசபை தேர்தலிலும் போட்டியிட இருக்கிறார்.
இதனால் சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரபூர்வமாக விலகி விட்டார். ஏற்கெனவே ராதிகா நடித்து முடித்துள்ள எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் ராதிகா நடித்த கேரக்டரில் அடுத்து நடிக்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ராதிகா சில நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். சேனல் தரப்பு சில நடிகைகளை குறிப்பிடுகிறது. இதனால் இதுவரை அடுத்த சித்தி பற்றி எந்த முடிவும் ஏற்படவில்லை.
ரம்யா கிருஷ்ணன், மீனா, தேவயானி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் இதுபற்றி விவரங்கள் வெளிவரும் என்று தெரிகிறது.