சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜெயா டிவியில் மாயா என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பி.நித்தியானந்தம் இயக்கத்தில் சத்யஜோடி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த தொடரில் ஈஸ்வரி ராவ், அபிஷேக், வாணி, ஜெகதீஷ் ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதைப்படி, சந்திரசேகரன் மிகப்பெரும் தொழில் அதிபர். இவரின் ஒரே மகள் மாயா ஆர்கிடெக்ட். அன்பானவள். அழகானவள். அவள் கைக்குழந்தையாக இருந்தபோதே சந்திரசேகரனை அவரது மனைவி பரமேஸ்வரி விவாகரத்து மூலம் பிரிந்து சென்று தொழில் அதிபர் அமர்நாத்தை மணந்து கொண்டாள். அதன்பிறகு சந்திரசேகரன் தன் மகள் மாயாவே உலகம் என்று வாழ்ந்து வருகிறார். அதோடு அமர்நாத்தின் அத்தனை தொழில்களுக்கும் போட்டி நிறுவனங்களை ஆரம்பிக்கிறார்.
நாளுக்கு நாள் போட்டி வலுத்த நிலையில் அமர்நாத் - பரமேஸ்வரியின் மகன் ரமேஷ் ஜெயிலுக்குப் போவதும், மாயா முதல்வர் கையால் விருது வாங்குவதும் ஒரே நாளில் நடக்கிறது. தான் தோற்றுவிட்டதாய் ஆத்திரப்படும் பரமேஸ்வரி, சந்திரசேகரனை நடுத்தெருவில் நிறுத்தி மாயாவை தன் பக்கம் கொண்டு வருவேன் என சபதம் எடுக்கிறாள். பரமேஸ்வரியின் சபதம் வென்றதா? சந்திரசேகரனின் லட்சியம் வென்றதா? என்பதுதான் க்ளைமாக்ஸ்.