நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. சென்னை 28 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, பிரியாணி, வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்பட சில படங்களில் நடித்தார். விஜயலட்சுமியால் சினிமாவில் நினைத்த இடத்தை பிடிக்க முடியவில்லை,
இதனால் துணை இயக்குனர் பெரோஸை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். கணவனை இயக்குனராக்குவதற்காக பண்டிகை என்ற படத்தை தயாரித்தார். தயாரிப்பாளராகவும், குடும்பத் தலைவியாகவும் மாறிவிட்டதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார். இப்போது சீரியலில் நடிக்கிறார் விஜயலட்சுமி.
விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நாயகி என்ற தொடரின் நாயகி விஜயலட்சுமி தான். ஒரு பிரபல தாதாவிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதை. அந்த தாதாவிடமிருந்து குடும்பத்தை நாயகி எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் தொடரின் திரைக்கதை. இனி சின்னத்திரையில் விஜயலட்சுமியை அடிக்கடி பார்க்கலாம்.