சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

பாண்டவர் பூமி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி சின்னத்திரைக்கு வந்தவர் ஷமிதா. சிவசக்தி அவரது முதல் சீரியல். கடந்த 8 வருடங்களாக சின்னத்தரை தொடர்களில் நாயகியாக நடித்து வருகிறார். உடன் நடித்த ஸ்ரீயை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இதுவரை பாசிடிவான கேரக்டர்களில் நடித்து வந்த ஷமிதா, தற்போது மவுனராகம் தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். அதிக மேக்அப் போட்டு கண்களை உருட்டி மிரட்டி பேசும் வழக்கமான வில்லியாக இல்லாமல் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக காரியம் சாதிக்கும் வில்லியாக நடித்து வெளுத்துக்கட்டி வருகிறார்.
"நான் வில்லியாக நடிக்க வேண்டும் என்று என் கணவர் வற்புறுத்தி வந்தார். ஆனால் எனக்கு தயக்கம் இருந்தது. இயக்குனர் தாய் செல்வம் இது வழக்கமான வில்லி கேரக்டர் இல்லை. கணவன் மீது உயிரை வைத்திருக்கும் மனைவி, அதற்கு பங்கம் வரும்போது வில்லியாக மாறுவார். அதுவும் கணவன் மீது கொண்ட அதீத அக்கறையால் தான். அதனால் ஓவர் ஆக்டிங், ஓவர் மேக்கப் எதுவும் தேவையில்லை. இயல்பாக நடித்தால் போதும் என்று சொல்லி நம்பிக்கை தந்தார். நானும் அப்படியே நடித்தேன். அது ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது" என்கிறார் ஷமிதா.