பாடகி கெனிஷா உடன் ஜோடியாக வந்த ரவி மோகன் : தந்தை என்பது பெயர் அல்ல பொறுப்பு என ஆர்த்தி ரவி காட்டம் | டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! |
மனதை திருடிவிட்டாய் படத்தில் பிரபுதேவா ஜோடியாக அறிமுகமானவர் காயத்ரி ஜெயராமன். அதன்பிறகு ஸ்ரீ, ஏப்ரல் மாதத்தில், வசீகரா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். சினிமா மார்க்கெட் குறைந்ததும் தன் கவனத்தை வேறு பக்கம் திருப்பினார். ஆழ்கடலுக்குள் நீச்சல் அடிக்கும் ஸ்கூபா டைவிங் கற்று அதில் மாஸ்டர் ஆனார். அந்தமான் தீவில் அந்த பயிற்சியாளராக பணியாற்றினார். சக பயிற்ச்சியாளரான சமித் ஸ்வானி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார்.
பின்னர் சில காலத்திற்கு பிறகு சின்னத்திரை பக்கம் வந்தார். கிராண்ட் மாஸ்டர், சூப்பர் குடும்பம், அச்சம் தவிர் நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருந்தவர் இப்போது நந்தினி சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாகியிருக்கிறார். நித்யாராம், மாளவிகா வேல்ஸ் என்ற இளம் நடிகைகளுக்கு போட்டியாக பைரவி கேரக்டரில் நடித்து தனக்கென ரசிகர் வட்டாரத்தை உருவாக்கி வருகிறார். நல்ல கேரக்டர்கள், குறிப்பாக டைட்டில் கேரக்டர் அமைந்தால் தொடர்ந்து நடிக்க காயத்ரி ஜெயராமன் முடிவு செய்திருக்கிறார்.