'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கலைஞர் டி.வி தனது 10வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி தென் பாண்டி சிங்கம் என்ற பிரமாண்ட வரலாற்றுத் தொடரை இன்று முதல் ஒளிபரப்பு செய்கிறது. ரோமாபுரி பாண்டியன் வரலாற்று தொடருக்கு பிறகு தி.மு.க தலைவர் கருணாநிதி கதை, திரைக்கதை வசனத்தில் ஒளிப்பாகும் தொடர். தென் பாண்டி சிங்கம் என்ற பெயரில் அவர் எழுதிய நாவல் இப்போது தொடராகி இருக்கிறது.
18ம் நூற்றாண்டில் சிவகங்கையை தலைநகராக கொண்டு நல்லாட்சி செய்த மருது சகோதரர்களின் கதை. 1801 முதல் 1857 வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த மாவீரர்களின் கதை. ரோமாபுரி பாண்டியனை தயாரித்த குட்டி பத்மினியே இதையும் தயாரிக்கிறார். கருணாநிதியின் ராமானுஜர் தொடரையும் இவரே தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் இன்று தொடங்கி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.