மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கலைஞர் டி.வி தனது 10வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி தென் பாண்டி சிங்கம் என்ற பிரமாண்ட வரலாற்றுத் தொடரை இன்று முதல் ஒளிபரப்பு செய்கிறது. ரோமாபுரி பாண்டியன் வரலாற்று தொடருக்கு பிறகு தி.மு.க தலைவர் கருணாநிதி கதை, திரைக்கதை வசனத்தில் ஒளிப்பாகும் தொடர். தென் பாண்டி சிங்கம் என்ற பெயரில் அவர் எழுதிய நாவல் இப்போது தொடராகி இருக்கிறது.
18ம் நூற்றாண்டில் சிவகங்கையை தலைநகராக கொண்டு நல்லாட்சி செய்த மருது சகோதரர்களின் கதை. 1801 முதல் 1857 வரை ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வீர மரணம் அடைந்த மாவீரர்களின் கதை. ரோமாபுரி பாண்டியனை தயாரித்த குட்டி பத்மினியே இதையும் தயாரிக்கிறார். கருணாநிதியின் ராமானுஜர் தொடரையும் இவரே தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் இன்று தொடங்கி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.