இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று 'அது இது எது'. இரண்டு நடிகர்களை சினிமாவுக்கு தந்த நிகழ்ச்சி. ஒருவர் சிவகார்த்திகேயன் மற்றொருவர் மா.. பா. ஆனந்த். முதலில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் அவர் சினிமா நடிகர் ஆனதும் மா.கா.பா. ஆனந்த் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். தற்போது அவரும் நடிகராகிவிட்டாலும் இன்னும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ப்ரைம் டைமான இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி இப்போதும் மக்களின் விருப்ப நிகழ்ச்சியாக இருக்கிறது. குரூப்ல டியூப், சிரிச்சா போச்சு, மாத்தியோசி போன்ற ரவுண்டுகள் மக்களை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 'சிரிச்சா போச்சு' ரவுண்டில் வந்த பல காமெடிகள் வைரலாக பரவியது.
லட்சுமி ராமகிருஷ்ணனை கிண்டல் செய்து வந்த “என்னம்மா இப்படி பண்றீங்ளேம்மா” சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மக்களை கவர்ந்த 'அது இது எது' 6 வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 350 எபிசோட்கள் ஒளிபரப்பாகியிருக்கிறது. விரைவில் மா.கா.பா ஆனந்த் முழுநேர நடிகராக இருக்கிறார். அதன்பிறகு புதிதாக ஒருவர் தொகுத்து வழங்க வருவார். அப்படியொரு நட்சத்திர தொகுப்பாளரை சேனலும் தேடிக் கொண்டிருக்கிறது.