அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
பொன்னூஞ்சல், பாசமலர், பிரியசகி, ரோமாபுரி பாண்டியன், மகாபாரதம், 63 நாயன்மார்கள் என பல சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்திருப்பவர் ஷாமிலி. பாசமலர் தொடரில் அவர் நடித்துள்ள பாசக்கார தங்கை வேடம் அவரை பெரிய அளவில் பேச வைத்துள்ளது.
இதுபற்றி ஷாமிலி கூறுகையில், நான் எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதுவாகவே என்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடிப்பேன். அந்த வகையில், பாசமலர் சீரியலில் பாசக்கார தங்கையாக நடித்து வருகிறேன். பல காட்சிகளில் கிளிசரின் போடாமலேயே அழுது நடிக்கிறேன். அது எனக்கு இயல்பாகவே வருகிறது. ஆக, இனிமேல் எந்தமாதிரியான செண்டிமென்ட் வேடங்கள் என்றாலும் எளிதாக என்னால் ஸ்கோர் பண்ண முடியும் என்கிற அளவுக்கு இந்த சீரியல் என்னை தயார்படுத்தி விட்டது.
மேலும், இப்படி சீரியல்களில் நான் பிசியாக நடித்து வந்தபோதும், ஸ்ரீகாந்த் நடித்த ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில் நடித்தேன். அதன்பிறகு ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா நடித்துள்ள பென்சில் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருக்கிறேன். ஸ்ரீதிவ்யா கதாநாயகி என்றாலும் எனக்கு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர். அந்த கேரக்டர்தான் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும். இந்த படம் திரைக்கு வந்தால் எனக்கு சினிமாவில் இருந்தும் நிறைய வாய்ப்புகள் வரும் என்று கூறும் ஷாலினி, நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக, எந்த கம்பெனிக்கும் ஏறி இறங்குவதில்லை. தேடி வந்தால் நடிக்கிறேன். காரணம், சீரியலில் நான் ரொம்ப பிஸி. சீரியல்கள் மூலம் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நான் தினமும் போய் வருகிறேன். அதனால் என்னை தங்களது குடும்பத்தில் ஒருவர் போலவே நேயர்கள் நினைக்கிறார்கள். இது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்கிறார்.