விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
கண்ணம்மா சீரியலில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். டைட்டீல் ரோல் என்பதால் அதன் பொறுப்பை உணர்ந்து நடிக்கிறேன். இந்த தொடர் பெரிய அளவில் ரீச்சாகி வருவது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்கிறார் நடிகை சோனியா.
மேலும் அவர் கூறும்போது, 1984ல் வெளியான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற நான், அதன்பிறகு 1987ல் நொம்பாரதி பூவு என்ற மலையாள படத்துக்காக கேரள அரசு விருது பெற்றேன். இப்படித்தான் எனது நடிப்பு பயணம் தொடங்கியது. அதையடுத்து தமிழ், மலையாளத்தில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன்.
பின்னர் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் இப்போதுவரை நடித்து வருகிறேன். அதோடு, சின்னத்திரையிலும் செல்லமே, மைநேம் இஸ் மங்கம்மா, மாதவி, முகூர்த்தம் உள்பட சில தொடர்களில் நடித்தேன். இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணம்மா தொடரில் நடித்து வருகிறேன். குடும்பத்தலைவி வேடம். கணவன், குழந்தைகள் என வாழ்ந்து வரும் நான், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறேன் என்பதுதான் இந்த சீரியல்.
அதனால் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக என்னுடைய போராட்டங்களைப் பார்த்து பெண்கள் கண்கலங்குகிறார்கள். அதனால் இதற்கு முன்பு நான் நடித்த சீரியல்களை விட இந்த கண்ணம்மா தொடர் எனக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது. டைட்டீல் ரோல் என்பதால் இப்போது எனது முழுக்கவன மும் இந்த சீரியலில்தான் உள்ளது என்கிறார் சோனியா.