சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ஈஸ்வர். தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே, பாவமன்னிப்பு, சித்திரம் பேசுதடி என சுமார் 12 தொடர்களில் நடித்துள்ள அவர், தற்போது கல்யாண பரிசு சீரியலில் ஹீரோவாகவும், கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் பயங்கரமான வில்லனாகவும் நடித்து வருகிறார். அதேபோல் பாவமன்னிப்பு, உணர்வுகள் தொடர்களில் நடித்து விட்டு தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ.
இவர்கள் இருவருக்கும் இன்று புதன்கிழமை (20-1-2016) காலை 6 மணி முதல் 7.15-க்குள் சென்னை திருவான்மியூரில் உள்ள கிருஷ்ண மந்திரம் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரது மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இது ஒரு காதல் மற்றும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்.
இதையடுத்து, ஜனவரி 30-ந்தேதி ஈஸ்வர்- ஜெயஸ்ரீயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள், இயக்கு னர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.