சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |

காமெடி மற்றும் குக் கலந்த நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்தது. கடைசி சில வாரங்களில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலை விலகியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்குக் காரணமானவர் 'குக்' ஆகக் கலந்து கொண்ட தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே தான் என பலரும் பேச ஆரம்பித்தார்கள்.
அனைவரும் எதிர்பார்த்தது போலவே 'விஜய் டிவியின் செல்ல மகள்' என்று அழைக்கப்பட்ட பிரியங்காதான் 'வின்னர்' ஆக தேர்வு செய்யப்பட்டார். அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியிலிருந்து விலகியபின் மணிமேகலை வெளியிட்ட வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் பார்வைகள் கிடைத்தது. அவருக்கான ஆதரவும் அதிகமானது. அதனால் நிகழ்ச்சியின் கோமாளிகள் மூலம் மணிமேகலைக்கு சில பதிலடியை மறைமுகமாகக் கொடுத்தனர். ஆனால், அதெல்லாம் மணிமேகலைக்கான ஆதரவைக் குறைக்கவில்லை.
இதனிடையே, தான் வெற்றி பெற்றது குறித்து உணர்வுபூர்வமான பதிவொன்றை இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டிருந்தார் பிரியங்கா. அதில் கமெண்ட் பகுதியில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து கமெண்ட் செய்துள்ளனர்.
காமெடியாக கடந்த ஐந்து சீசன்களாக வலம் வந்த நிகழ்ச்சியை கலக நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார்கள் என அதன் ரசிகர்கள் கரித்துக் கொட்டியுள்ளார்கள்.




