ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி |

பிரபல சின்னத்திரை நடிகையான தீபா, பிரியமான தோழி, அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த முருக பக்தை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இவர் முருகன் ஆணைக்கிணங்க தொட்டியம் அருகேயுள்ள ஏலூர்பட்டியில் கோவில் ஒன்றை கட்டியுள்ளாராம்.
இதுகுறித்து அவர் சொன்ன போது, 'மாங்காட்டு காமாட்சியம்மன் கோவில் சென்றுபோது அங்கே முருகனின் பெயரில் உள்ள சுப்பிரமணியன் என்கிற சாமியாரை பார்த்தேன். அவர் தொட்டியம் அருகே காசிவிஸ்வநாதர் கோவில் கட்டப்பட்டு வருவதை எனக்கு சொன்னார். அவரை பார்த்த சில நாட்களிலேயே முருகனுக்கு கோவில் எழுப்ப அங்கு போ என்று எனக்கு தோன்றியது. அடுத்த நாளே அங்கு சென்று ஊர்க்காரர்களுடன் அந்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். இப்போது எல்லா வேலையும் முடிந்து கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. இதில் என்னுடன் மெட்டி ஒலி வனஜா, கம்பம் மீனா, மின்னல் தீபா, அழகப்பன் ஆகியோருக்கும் பங்கு இருக்கிறது' என்று கூறியுள்ளார்.




