அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

பிரபல சின்னத்திரை நடிகையான தீபா, பிரியமான தோழி, அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த முருக பக்தை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இவர் முருகன் ஆணைக்கிணங்க தொட்டியம் அருகேயுள்ள ஏலூர்பட்டியில் கோவில் ஒன்றை கட்டியுள்ளாராம்.
இதுகுறித்து அவர் சொன்ன போது, 'மாங்காட்டு காமாட்சியம்மன் கோவில் சென்றுபோது அங்கே முருகனின் பெயரில் உள்ள சுப்பிரமணியன் என்கிற சாமியாரை பார்த்தேன். அவர் தொட்டியம் அருகே காசிவிஸ்வநாதர் கோவில் கட்டப்பட்டு வருவதை எனக்கு சொன்னார். அவரை பார்த்த சில நாட்களிலேயே முருகனுக்கு கோவில் எழுப்ப அங்கு போ என்று எனக்கு தோன்றியது. அடுத்த நாளே அங்கு சென்று ஊர்க்காரர்களுடன் அந்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். இப்போது எல்லா வேலையும் முடிந்து கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. இதில் என்னுடன் மெட்டி ஒலி வனஜா, கம்பம் மீனா, மின்னல் தீபா, அழகப்பன் ஆகியோருக்கும் பங்கு இருக்கிறது' என்று கூறியுள்ளார்.