ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
பிரபல சின்னத்திரை நடிகையான தீபா, பிரியமான தோழி, அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த முருக பக்தை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இவர் முருகன் ஆணைக்கிணங்க தொட்டியம் அருகேயுள்ள ஏலூர்பட்டியில் கோவில் ஒன்றை கட்டியுள்ளாராம்.
இதுகுறித்து அவர் சொன்ன போது, 'மாங்காட்டு காமாட்சியம்மன் கோவில் சென்றுபோது அங்கே முருகனின் பெயரில் உள்ள சுப்பிரமணியன் என்கிற சாமியாரை பார்த்தேன். அவர் தொட்டியம் அருகே காசிவிஸ்வநாதர் கோவில் கட்டப்பட்டு வருவதை எனக்கு சொன்னார். அவரை பார்த்த சில நாட்களிலேயே முருகனுக்கு கோவில் எழுப்ப அங்கு போ என்று எனக்கு தோன்றியது. அடுத்த நாளே அங்கு சென்று ஊர்க்காரர்களுடன் அந்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். இப்போது எல்லா வேலையும் முடிந்து கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. இதில் என்னுடன் மெட்டி ஒலி வனஜா, கம்பம் மீனா, மின்னல் தீபா, அழகப்பன் ஆகியோருக்கும் பங்கு இருக்கிறது' என்று கூறியுள்ளார்.