கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சின்னத்திரை நடிகையான பானுமதி அண்ணா, இனியா, சின்ன மருமகள் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், தனது கடந்த கால சோக வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் பேசிய பானுமதி, 'எனக்கு 16 வயதிலேயே திருமணம் முடிந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். என் கணவர் அதிகமாக குடித்து மஞ்சள் காமலை நோயால் உயிரிழந்தார். ஆனால், கணவரது வீட்டார் நான் அவரை கொன்றுவிட்டதாக கூறினார்கள். அதன்பின் அவர்கள் உறவே வேண்டாம் என்று பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
குடும்பத்திற்காக சீரியல்களில் துணை நடிகையாக 500 ரூபாய் சம்பளத்தில் நடிக்க ஆரம்பித்தேன். குழந்தைகளுக்காக இரண்டாவது திருமணம் செய்தேன். அந்த வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. அதன்பிறகு மீண்டும் குடும்பத்திற்காக ஓட ஆரம்பித்தேன். எனது மகன்களை தற்போது நல்லபடியாக வளர்த்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார். அவரது சோகக்கதை ரசிகர்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.