பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் அறிமுக விழா நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ் முருகன் முன்னிலை வகித்தார்.
சங்கத்தில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் நல வாரியத்தின் மூலம் கிடைக்கும் நலவாரிய அட்டையையும் செய்தித்துறை அமைச்சர் வழங்கி வாழ்த்தி பேசினார் .
சங்கத்தின் புதிய தலைவர் மங்கை அரிராஜன் பேசும்போது “சின்னத்திரை இயக்குனர்களுக்கான புதிய ஊதிய உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இனி சின்னத்திரை தயாரிப்பாளர்கள் இந்த புதிய ஊதிய உயர்வை கொடுக்க வேண்டும். சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் இனி சின்னத்திரை சீரியல்களில் பணிபுரியக் கூடாது. சங்கத்தில் உறுப்பினராக உள்ள இயக்குனர்கள் மற்றும் உதவி துணை, இணை இயக்குனர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும்” என்றார்.
விழாவில் பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி, தயாரிப்பாளர் எஸ் தானு, நடிகர் எஸ்வி சேகர், திரைப்பட இயக்குனர் சங்க செயலாளர் பேரரசு, கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், குட்டி பத்மினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.