அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தொலைக்காட்சி பிரபலமான தங்கதுரை தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். தற்போது அவர் பிஎம்டபிள்யூ காரை வாங்கியிருக்கிறார். அவரது இந்த வளர்ச்சியை பார்த்து பலரும் பாராட்டும் இந்த வேளையில் அடுத்ததாக அவர் செய்த சம்பவம் பலரையும் நெகிழச் செய்துள்ளது. புது காரை வாங்கிய தங்கதுரை அந்த காரில் தன்னுடைய குடும்பத்தினரை அழைத்துச் செல்லாமல் ஏழை குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளார். அவர்களை வெளியில் அழைத்துச் சென்று புதுத்துணி, உணவு வாங்கி கொடுத்து மகிழ்வித்துள்ளார். தனது சுய சம்பாத்தியத்தில் ஏற்கனவே 3 ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வரும் தங்கதுரை தற்போது ஏழை குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் செய்துள்ள இச்செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.